வலைகளை வெட்டி கடலில் வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டகாசம்

ராமேஸ்வரம்: வலைகளை வெட்டி கடலில் வீசி, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை பறித்து வெட்டி கடலில் வீசினர். மேலும் இங்கு மீன் பிடிக்கக்கூடாது என மிரட்டி அவர்களை விரட்டியடித்தனர். அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்றனர்.

இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதும் மீண்டும் அங்கு வந்த மீனவர்கள், கடலில் வீசப்பட்ட வலைகளை மீட்டு நேற்று காலை கரை திரும்பினர்.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களை தாக்குவது, விரட்டியடிப்பது தொடர்கிறது. இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்லவே அச்சமாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடன் தலையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என வேதனை தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: