ராமேஸ்வரம்: வலைகளை வெட்டி கடலில் வீசி, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை பறித்து வெட்டி கடலில் வீசினர். மேலும் இங்கு மீன் பிடிக்கக்கூடாது என மிரட்டி அவர்களை விரட்டியடித்தனர். அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்றனர்.