சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் ஆனார். விசாரணையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது நேரில் பார்த்தது மற்றும் கண்ணாடி வழியாக பார்த்தது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஆணையத்தின் நீதிபதி, ஏன் ஜெயலலிதாவை அழைத்துச் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விகள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.