சென்னை : அதிமுக அரசு, விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் என்று வீரகனூரில் ரூ.131.51 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் முதலமைச்சர் பழனிசாமி பேசினார். மேலும் நீர் மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறோம் என்றும் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தனது உரையின் போது தெரிவித்தார்.