பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள அண்ணா சாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் சாலை

மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில், 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பியபடி, மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள மண்டபத்திற்கு ெகாண்டு சென்றனர். இதனால், 30 நிமிடத்திற்கு மேல் சம்பந்தப்பட்ட சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: