சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் ஆர்.கே.அய்யப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 குளங்களை தனியார் மருத்துவமனைகள் ஆக்கிரமித்துள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் சாதாரண மழை பெய்தால் கூட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருகிறது. எனவே, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 32 குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பினோம்.