புதுடெல்லி: ஓஎன்ஜிசியின் 149 எண்ணெய் வயல்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடம் (ஓஎன்ஜிசி) உள்ள பங்குகளை மத்திய அரசு ஏற்கெனவே விற்பனை செய்துள்ளது. தற்போது 2வது கட்டமாக சிறிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை விற்க திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதியை 2022ல் 10 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.