சென்னை: சாலை விபத்தில் இறந்த சிவில் இன்ஜினியரின் குடும்பத்துக்கு ரூ19 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில், தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்தவர் தமிழரசன். இவர் 2015ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து, ஒசூருக்கு பைக்கில் பயணம் செய்தார். அப்போது, அந்த வழியே கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக வந்த லாரி தமிழரசன் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பலத்த காயமடைந்த தமிழரசன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இறந்தார்.