சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும், 29 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. செயற்குழு உறுப்பினர் லாசர் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதிமுக அரசு வரி சீராய்வு என்ற பெயரில், மக்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. தோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து தள்ளிவைத்து வருகிறது.