சென்னை: காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியையொட்டி டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முப்படை வீரர்கள் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேற்று காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.ேக.விஸ்வநாதன், காவல் உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காவல் வீரவணக்க நாள் நினைவுத் தூண் அருகே மலர் வளையம் வைத்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி மற்றும் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.