மும்பை: பங்குச்சந்தையில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். ஆனால், இந்த வார தொடக்கத்தில் இருந்து பங்குச்சந்தை சற்று ஏற்றம் பெற்றது. நேற்று திடீரென பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. முக்கிய பங்குகள் மதிப்பு குறைந்ததால் 880 புள்ளிகள் வரை ஊசலாட்டம் ஏற்பட்டது. ரூபாய் மதிப்பு நேற்று காலை 6 காசு அதிகரித்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் 10 காசு அளவுக்கு மதிப்பு குறைந்தது. மாலையில் 13 காசு குறைந்து ரூ73.61ஆக இருந்தது.