ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா என்ற இடத்தில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார்  எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள வனப்பகுதி வழியாக தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.  இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். மேலும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் இன்று வரை நீடித்த இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: