நுங்கம்பாக்கம் குட் செப்பர்ட் பள்ளி மைதானத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதால் பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் குட் செப்பர்ட் பள்ளி மைதானத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதால் பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இரண்டரை ஏக்கர் பள்ளி மைதானத்தை கையகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலம் கையகப்படுத்தும் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற்தில் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது உள்ள நிலையே நீடிக்க உத்தரவிட்ட ஐகோர்ட் அடுத்த மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: