காந்தி மரணம் குறித்து நிலானியிடம் விசாரிக்க முடிவு : நடிகை நிலானியை போலீஸ் தேடுகிறது

சென்னை : சின்னத்திரை நடிகை நிலானியின் ஆண் நண்பர் காந்தி மரணமடைந்ததை தொடர்ந்து  நிலானியை கே.கே.நகர் போலீசார் தேடி வருகின்றனர். காதலை கொச்சைப்படுத்தி புகார் அளித்ததால் விரக்தியடைந்த நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  தம்முடன் பழகிய காந்தியை நண்பராக மட்டுமே கருதினேன், ஆனால் அவர் தன்னை திருமணம் செய்யும் படி கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பேரில் இரு தரப்பினரையும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி கே.கே.நகரில் காந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இதன் பின்னர் காந்தியும் நிலானியும் நெருக்கமாக இருப்பது போன்று பல வீடியோ ஆதாரங்களையும், புகைப்பட ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி வற்புறுத்தியதாக புகார் அளித்த நிலானிக்கு காந்தி லலித்குமார் காலில் மெட்டி போட்டு திருமணம் செய்துள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது என்று கூறினார். இந்நிலையில் நிலானி தர்போது தலைமறைவாக இருப்பதால், கே.கே.நகர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: