மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 படம் ஓடிடியில் வெளியானது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி படம் வெளியானதால் தியேட்டர் அதிபர்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பஹத் பாசில் நடித்துள்ள இருள் மலையாள படமும் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் பஹத் பாசிலுடன் தர்ஷனா ராஜேந்திரன், சௌபின் சாஹிர் என மேலும் 2 கேரக்டர்கள் மட்டுமே படத்தில் நடித்துள்ளனர். ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தை ஓடிடியில் வெளியிடவும் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.