இந்தி நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை கடந்த 3 வருடமாக காதலித்து வந்தார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் நடந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் கோவாவுக்கு சென்றனர். அங்கு சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் பலாத்காரம் செய்ததாகவும் பூனம் பாண்டே, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.