வாய்ப்பு தேடிய வங்கி அதிகாரி

இன்ஜினியரிங் படித்தவர்கள் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வங்கியில் அதிகாரியாக இருந்த வர்மா நடிப்பு ஆசையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிக்க வந்தார். அவர் தனது அனுபவம் பற்றி கூறினார். ‘சினிமாவுக்குள் வந்த வேகத்தில் இரும்புத் திரை, உல்டா, தடம், தீரன் அதிகாரம் ஒன்று, காளி,  கே.டி (எ) கருப்புதுரை, பஞ்சராக்ஷரம் என பல படங்களில் நடித்தேன். அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் புதியவர்கள் மட்டுமே நடிப்பதாக படக்குழுவிலிருந்து தகவல் வந்தது.

இயக்குனர் எச்.வினோத்தை அணுகி உள்ளேன். புது இயக்குனர் தீனதயாளன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது. ஹீரோவாகிவிட்டாலும் நல்ல கேரக்டர் கிடைத்தால் அதிலும் நடிப்பேன். நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடினேன். கடின முயற்சியால் பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க முடிந்தது’ என்றார்.

Related Stories: