ஆபாச படம் வெளியிட்டதால் நடிகை அதிர்ச்சி; சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிரபல ஹீரோயின்களும் வளர்ந்து வரும் நடிகைகளும் இணைய தளத்தில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் போட்டியில் இறங்கி உள்ளனர். ரம்யா பாண்டியனும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபகாலமாக தனது நார்மல் தோற்ற படங்களுடன், கவர்ச்சி படங்களும் வெளியிட்டு வருகிறார்.

திடீரென்று சேலை கட்டிய படங்கள் வெளியிட்டு டிரண்ட் ஆனார். ஆனாலும் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு கைகூடவில்லை. நடிகர், நடிகைகள் தங்களுக்கென அதிகாரபூர்வமாக டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கங்களை வலைதளத்தில் வைத்திருந்தாலும் அதே பெயரில் போலி கணக்குகளும் நெட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் பெயரில் தொடங்கப்பட்ட டிவிட்டர் கணக்கு ஒன்றில் நிர்வாணப் படங்கள், ஆபாசமான பதிவுகளை யாரோ வெளியிட்டுள்ளனர். இதுபற்றி ரம்யாவுக்கு தெரியவர அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது ஒரிஜினல் அக்கவுண்ட் எது என்பதை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். போலி கணக்கு தொடங்கி தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: