யானையுடன் நடிகை பலப்பரீட்சை

யானையுடன் பலப்பரீட்சை நடத்தியதாக ‘கொலைகாரன்’ பட ஹீரோயின் ஆஷிமா நர்வால் பற்றி தகவல் பரவியது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்று அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு பதில் அளித்தார். ‘நிஜம்தாங்க. விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படத்தில் நடித்தபிறகு தற்போது ராஜபீமா படத்தில் நடிக்கிறேன். இதில் யானையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் யானையுடன் நடிக்கும்போது அதனுடன் எளிதில் பழக முடியவில்லை. உள்ளூர் யானைப்பாகன் பயிற்சி கொடுத்தார்.

அந்த பாகன் தன்னுடைய மொழியில் சொல்வார். மொழிபெயர்ப்பாளர் மூலம் அதை நான் கற்றுக்கொண்டு யானையுடன் பழகினேன். ஒரு காட்சியில் ஹீரோ ஆரவ்வை என் பக்கமாக நானும், தன் பக்கமாக யானையும் இழுக்க வேண்டும். இது யானைக்கும் எனக்குமான பலப்பரீட்சை. காட்சிப்படி நான் தான் ஜெயிக்க வேண்டும். ஆனால் யானை ஆரவ்வை தன் பக்கம் இழுத்ததால் பதறிப்போனோம். நீங்கள் கேட்டதுபோல் யானையுடன் பலப்பரீட்சையெல்லாம் நடக்கற காரியமா’ என்றபடி முத்துக்கள் சிதறியதுபோல் சிரித்தார் ஆஷிமா.

Related Stories: