போதையில் தாக்குதல் நடத்திய 3 பேரையும் அப்பகுதியை சேர்ந்த சந்திரலேகா (40) என்ற பெண்ணும் அவரது மகன் விஜய் (20) என்பவரும் தடுக்க முயன்றுள்ளனர். இதில் ஆத்திரமான 3 பேரும் அவர்கள் இருவரையும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியை சேர்ந்த 12 பேரை கஞ்சா போதையில் இருந்த அபினேஷ், முத்து, விஷ்ணு ஆகிய 3 பேரும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டியதில் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கஞ்சா போதையில் சுற்றி திரிந்த அபினேஷ், விஷ்ணு ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். மேலும், பட்டாக்கத்தி தாக்குதலில் படுகாயம் அடைந்த 12 பேரையும் அம்பத்தூர், திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்களை தரக்குறைவாக பேசி, தட்டிக் கேட்ட 12 பேரையும் பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டிய அபினேஷ், விஷ்ணு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான முத்து என்பவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
The post பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை சரமாரி வெட்டிய 2 பேர் கைது: திருமுல்லைவாயலில் பரபரப்பு appeared first on Dinakaran.