தூத்துக்குடி, மார்ச் 3: தூத்துக்குடி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் 10ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தாராம். மேலும் மாணவி தினமும் பள்ளி செல்லும் போது, வழியில் நின்றுகொண்டு டார்ச்சர் செய்து மிரட்டினாராம். இதனால் மனம்உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் போக்சோ மற்றும் மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆகாஷ் மீது சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், எஸ்ஐ சங்கர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.