கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி 10, 11ம் தேதி பயணம்

சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10, 11ம் தேதி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய செல்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் தொழில் வளர்ச்சி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, மதுரை, திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த மாதம் சென்று வந்தார்.

அதேபோன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் செய்து கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.  ஆனால், பல்வேறு காரணங்களால் 3 முறை இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருகிற 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், 11ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் நேரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.

Related Stories: