ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப்புகள் 28ல் பெரும்பாலானவை காவல்துறை விதிகளை மீறி செயல்படுகிறது. ஆனால், இவற்றை போலீசார் கண்டுகொள்வதில்லை.காரணம், மாதம் தோறும் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை கிளப் உரிமையாளர்கள் வலுவாக கவனித்து விடுகின்றனர்.இந்நிலையில், ஈரோடு மாவட்ட புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள சக்திகணேசன், விதிமுறை மீறும் கிளப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலீஸ் பிடி திடீரென இறுகியதால், கிளப்புகளில் ும்பாலான கிளப் வெறிச்சோடி கிடக்கிறது. இது, காவல்துறை உள்ளிட்ட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டது.