திருப்பூர்: திருப்பூரில், கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிடும் அதிகாரிகளால் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சூரியநல்லூர் கிராம சந்திப்பு உள்ளது. இங்கு, அதிகமான விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோவை - பல்லடம் வழியாக தாராபுரம் செல்லும் வாகனங்கள், பஸ்கள் அதிவேகமாக வருவதாலும், அச்சாலையில் மெட்டல் தடுப்புச்சுவர்கள் அருகாமையில், அதிகமாக இருப்பதினால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது.
கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்; தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் சூரியநல்லூரில் தொடரும் விபத்துகள்
