×

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி

கிருஷ்ணகிரி, ஆக.9: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் ருத்ரமூர்த்தி(18). இவர் சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக, போர்வெல் மோட்டாரை ருத்ரமூர்த்தி போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ெசல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனஹள்ளி போலீசார், ருத்ரமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Narasimhan ,Veppanahalli ,Thimmachandram ,Krishnagiri district ,Rudramurthy ,Choolagiri ,Koneripalli ,
× RELATED 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்