×

சூதாடிய 6 பேர் கைது; ₹52 ஆயிரம் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, செப்.21: அஞ்செட்டி போலீசார் பசுவனபுரம் பக்கமுள்ள கோட்டையூர் பகுதியில், நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் நாலாபுறமும் தப்பியோடினர். ேபாலீசார் துரத்திச் சென்று 6 பேரை மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், குமாரத்தனப்பள்ளி பரசிவமூர்த்தி (36), கோட்டையூர் சிவக்குமார் (30), கெலமஙகலம் சீனிவாசன் (46), பீரனப்பள்ளி சிவக்குமார் (28), தேன்கனிக்கோட்டை தர்கா தெரு தேவராஜ் (29), மணிகண்டன் (44) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார், சூதாடியவர்கள் விட்டு ஓடிய 7 டூவீலர், 2 கார்கள், ₹53,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தப்பியோடிய மேலும் 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சூதாடிய 6 பேர் கைது; ₹52 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Anchetty ,Kotdaiyur ,Pasuvanapuram ,Kumarathanapalli ,
× RELATED உங்களைத் தேடி உங்கள் ஊரில்...