ஹைதரபாத் : ஒவ்வாமை, காய்ச்சல் உள்ளவர்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தனது இணையதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வாமை, காய்ச்சல், ரத்தக்கசிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்மை அடைந்த பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒவ்வாமை உள்ளவர்கள் கோவாக்சினை தவிர்த்திடுக : 3 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் போடக் கூடாதவர்களின் பட்டியலை வெளியிட்டது பாரத் பயோடெக்
