மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை, ஏப்.6: மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் மாணவ, மாணவிகள் 25 பேர் காயமடைந்தனர். திருச்சி அருகே துப்பாக்கித் தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு நேற்று மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன், புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குமாரமங்கலம் கிராமச் சாலையில் நேற்றுகாலை கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து இறங்கி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 25 மாணவர்களுடன் வேன் உதவியாளரும் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற மாத்தூர் போலீசார், மாணவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேனை ஓட்டிச் சென்ற திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த அப்துல்மாலிக் மகன் பக்ருதீனிடம் மாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மாத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: