மகாராஷ்டிராவில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் உல்ஹாஸ்நகர் பகுதியில் உள்ள முர்லிவாலா கட்டிடத்தின் 2வது மாடியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் அவரின் குழந்தை படுகாயமடைந்துள்ளார். கட்டிடத்தின் 3வது மாடியில் பிளாட்பார்ம் வேலை நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. மேலும் கட்டிடத்தில் இருந்த மற்ற குடியிருப்பு வாசிகளை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: