மல்லிகை பூக்களை சேதப்படுத்தும் புழுக்கள் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை

 

மதுரை, மே 31: மல்லிகைப் பூ மேலாண்மை குறித்து தோட்டக் கலைத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் சுமார் 1970 ஹெக்டேரில் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மல்லிகை பூவானது 1717 ஹெக்டேரில் சாகுபடி நடக்கிறது. மல்லிகையில் பூக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மொட்டு துளைப்பான் என்னும் புழு, பூக்கள் மொட்டுகளாக இருக்கும் போதே பூக்களை சேதம் செய்து விடுகின்றன.

இத்தகைய மொட்டுகள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன. ஒரு புழுவானது தனது ஆயுள் காலத்தில் 2 முதல் 3 மொட்டுக்களை உதிர செய்கின்றன. இப்புளுவானது தன் ஆயுளின் ஆரம்ப காலக்கட்டத்தில் மஞ்சள் நிறமாகவும் வளர்ச்சி பெற்ற பிறகு பச்சை நிறமாகவும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த தையோக்லோபிரிட் 240 எஸ்சி 1 மில்லி லிட்டர் அல்லது ஸ்பினோசாட் 45 எஸ்சி 0.5 மில்லி லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது.

இயற்கை முறையில் 5 வேப்பங் கொட்டையினை பொடியாக்கி 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்த பின்னர் அதனை நன்கு கலக்கி விட்டு வடிகட்ட வேண்டும். இதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கை தௌிப்பு மூலம் தௌிக்க வேண்டும். பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் 2 கிராம் லிட்டர் என்ற அளவிலும் தௌிக்கலாம். ஏக்கருக்கு 4 விளக்கு பொறிகள் வைப்பதன் மூலம் தாய்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

The post மல்லிகை பூக்களை சேதப்படுத்தும் புழுக்கள் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: