மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, டிச.14:தேன்கனிக்கோட்டை போலீசார், முத்துராயன் தொட்டி பகுதியில், நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, டிராக்டர் ஒன்று கேட்பாரற்று நின்றிருந்தது. அந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்த போது, அதில் ஒரு யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் மணலை திருட்டுத்தனமாக அங்கிருந்து கடத்திச் செல்ல முயன்றதும், போலீசாரை கண்டதும் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரிந்தது. இதையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: