நியூயார்க்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரூ.2,34,000 கோடி வரி விதித்ததன் மூலம் சீனா அமெரிக்க இடையேயான வர்த்தக போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்படும் சூழல் அண்மைக் காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்துள்ள 25% கூடுதல் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமான வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
சீன பொருட்களுக்கு 25% கூடுதல் வரி அமல்: அதிகாரப்பூர்வ வர்த்தகப் போரை தொடங்கியது அமெரிக்கா!
