போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு

பதோகி: உத்தர பிரதேசத்தின் பதோகியில் உள்ள நை பஜார் பகுதியை சேர்ந்த தீபக் சோன்கர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் இவரை கைது செய்து கோட்வாலி சிறையிலடைத்தனர். இவரது உறவினரான தினா சோன்கர் நகர பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளார். காவல் நிலையத்துக்குள் தனது அடியாட்களுடன் நுழைந்த அவர் அங்கிருந்த காவலர்கள் 4 பேரையும் அருகில் காலியாக இருந்த கடைக்குள் வைத்து பூட்டினார். பின்னர், தனது உறவினர் தீபக்கை அழைத்து கொண்டு சென்று விட்டார். தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த போலீஸ் படையினர் அடைக்கப்பட்டிருந்த காவலர்களை பூட்டிய கடையினுள் இருந்து மீட்டனர். இது தொடர்பாக பாஜ நகராட்சி பகுதி வார்டு உறுப்பினர் தினா சோன்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்….

The post போலீசை சிறைபிடித்த பாஜ பிரமுகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: