போடியில் கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

போடி: போடியில் கழிவுநீர் வாறுகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என  பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், போடியில் உள்ள  காமராஜர் சாலை மூன்றாந்தலில் வள்ளுவர் சிலை உள்ளது. இப்பகுதியில் 4  முக்கியச் சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதியில் பொதுமக்கள் சிறுநீர்  கழிப்பிடம் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது பராமரிப்பின்றி  சேதமடைந்தது. மேலும், இப்பகுதியில் உள்ள வாறுகால் குறுகியதாக மண்மேவி  கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. இந்நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, நகராட்சி கமிஷனர் அகிலோ  ஆகியோர், இப்பகுதியை ஆய்வு செய்தனர். அதன்பின் கழிப்பறையும், குறுகிய  வாறுகாலும் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது. புதிய வாறுகால் பணி நடந்து  வருகின்றது. கழிவுநீர் கடந்து செல்ல வள்ளுவர் சிலை முன்பு தற்காலிக  வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழராஜவீதியில் விரிவான  வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள்  போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். எனவே, வாறுகால் பணியை விரைந்து  முடித்து, தற்காலிக வாறுகாலை அகற்ற வேண்டும் என நகராட்சிக்கு, பொதுமக்கள்,  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post போடியில் கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: