பொதுமக்கள் கோரிக்கை விராலிமலை அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன் திருட்டுபோன 4 நாளில் கிடைத்தது பைக்

விராலிமலை: விராலிமலை அருகே பைக் திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை ரெத்னா நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர் கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது பைக் மாயமாகியிருந்தது. இதையடுத்து முருகானந்தம் விராலிமலை போலீஸில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விராலிமலை சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் சோதனை சாவடி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி வாகனத்தின் ஆவணத்தை சோதனையிட்டனர். அப்போது அதன்மூலம் அந்த பைக் முருகானந்தத்தின் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் விநாயகர் நகரைச் சேர்ந்த முருகேசன்(42) என்பவரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

The post பொதுமக்கள் கோரிக்கை விராலிமலை அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன் திருட்டுபோன 4 நாளில் கிடைத்தது பைக் appeared first on Dinakaran.

Related Stories: