பெண்ணை தாக்கிய டீ மாஸ்டர் கைது

கோவை, ஆக.3: பெண்ணை தாக்கிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவைப்புதூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சுதா (47). கார் லோன் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தீபு என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காந்திபுரத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலைபார்த்து வரும் ராமு (43) என்பவரிடம் லோன் தொடர்பாக செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த சுதா, நேற்று ராமுவிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமு தகாத வார்த்தைகளால் பேசி சுதாவை தாக்கினார். இதுகுறித்து சுதா காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டீ மாஸ்டர் ராமுவை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணை தாக்கிய டீ மாஸ்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: