பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் மோடி வருகையையொட்டி விழா நடைபெறும் பெரியமேடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இன்று சென்னை வருகிறார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. பிரதமர் வருகையையொட்டியும், விழா நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக ஈவெரா சாலை, தாசுபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணா சாலை, எஸ்.பி.பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளில் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: