பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து : ரஜினிகாந்த் மகிழ்ச்சி

டெல்லி : தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இந்திய திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும்  தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்….

The post பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து : ரஜினிகாந்த் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: