பள்ளிகளை மேம்படுத்தும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15 சதவிகிதம் வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இன்று மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளை தங்குதடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.  தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு. இதை சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்….

The post பள்ளிகளை மேம்படுத்தும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு: கமல்ஹாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: