பெங்களூரு: அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார். ரெய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா வீரகோடவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது: குருபர் சமூகத்தினருக்கு எஸ்,டி. இடஒதுக்கீடு வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போதைய இடஒதுக்கீடு போராட்டத்தில் அரசியல் உள்ளது. இதற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. இந்த காரணத்துக்காக நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அதே போல் மத்திய, மாநிலத்தில் பா.ஜ. அரசு அமைந்துள்ளது. அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து இடஒதுக்கீடு பெற முடியும். ஆனால் பதவியில் உள்ள அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக தற்ேபாது போராட்டம் நடத்தி வருகிறார் என்று புரியவில்லை.
அமைச்சர் பதவியில் இருக்கும் ஈஸ்வரப்பா யாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி
