கொழும்பு : இலங்கையில் கனமழைக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையில் கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மழைக்கு 21 பேர் பலி
