நாகப்பட்டினத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை தினக்கூலி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனு கொடுத்தனர்.

 

The post நாகப்பட்டினத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: