நத்தத்தில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

நத்தம், ஆக. 31: நத்தம் வேலம்பட்டி ஊராட்சியில் நேருநகர், செல்லம்- புதூர் போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது.இது நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தனியார் மதுபான கடை அமைக்க வேலைகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் குடியிருப்புகள் மட்டுமின்றி மருத்துவமனையும் உள்ளது. இதனால் நேற்று இப்பகுதியை சேர்ந்தவர்கள், மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நத்தம் தாலுகா அலுவலத்திற்கு சென்று தாசில்தார் ராமையாவிடம் மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் செல்வம் மற்றும் அப்பகுதி குடியிருப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post நத்தத்தில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு appeared first on Dinakaran.

Related Stories: