தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் மே 2ம்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அப்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகள் தெரிந்த உடன் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கூடி நின்று பட்டாசுகள் வெடிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கொரோனா பரவல் அதிகமாவதற்கு காரணமாக அமைந்துவிடும்.எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை அனைத்து அரசியல் இயக்கத்தினர் தவறாது கடைபிடிக்க கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் முடிவுகளின் அனைத்து விதமான கொண்டாட்டங்களையும் நாம் ஒன்று சேர்ந்து தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: