தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி, ஆக.19: தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புரோட்டா கடை மாஸ்டர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கலைச்செல்வன் (29). இவரது நண்பர் சதீஷ். இவருக்கு ஆக.15ம் தேதி பிறந்தநாள் என்பதால், தனது நண்பர்கள் டிரைவர் சந்திரசேகர் (40), புரோட்டாக்கடை மாஸ்டர் அப்பு (26) ஆகியோர் சதீசிடம் மது விருந்து கேட்டுள்ளனர். ஆனால் அன்று டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் மது கிடைக்காது என்றும், மறுநாள் மது விருந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் சதீஷ் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவு கலைச்செல்வன் வீட்டருகே அவரும், சதீசும் மது அருந்திக்கொண்டிருந்ததை, அந்த வழியாக வந்த சந்திரசேகரும், அப்புவும் பாரத்து அவர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே, பீர் பாட்டிலால் கலைச்செல்வன், சதீஷ் ஆகியோரை, அப்புவும், சந்திரசேகரும் சரமாரியாக தாக்கினர். இதில் கலைச்செல்வன் உயிரிழந்தார்.இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் சந்திரசேகரை கைது செய்தனர். புரோட்டாக்கடை மாஸ்டர் அப்புவை தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: