திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 

திருவள்ளூர்: இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 250க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதற்கு கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: