ஆவடி: காரில் கஞ்சா கடத்திய பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வில்லிவாக்கத்தில் இருந்து புறநகர் பகுதியான ஆவடிக்கு அம்பத்தூர் வழியாக காரில் கஞ்சா கடத்துவதாக அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரம் அய்யப்பன் கோயில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது. இதனை பார்த்த போலீசார், அந்த காரை வழிமடக்கி சோதனை செய்தனர். அப்போது, காருக்குள் பிளாஸ்டிக் பையில் கஞ்சா பொட்டலங்கள்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, போலீசார் காரில் இருந்த 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புறநகருக்கு காரில் கஞ்சா கடத்தல் பிரபல ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர்: 2 கிலோ பறிமுதல்
