திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

 

கள்ளக்குறிச்சி, அக். 23: திருக்கோவிலூரில் 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்த வீரமணி மகன் ராஜேஷ்(22) என்பவருக்கும் அவரது அண்ணன் மனைவிக்கும் இடையே இருந்த தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அண்ணனின் 2 வயது குழந்தையை கொலை செய்து குழந்தையின் சடலத்தை ஸ்பீக்கர் பாக்சில் வைத்து தடயங்களை அழித்த வழக்கில் குற்றவாளியை திருப்பாலபந்தல் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.

குற்றவாளி ரஜேஷ் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவர் பிணையில் விடப்பட்டு வெளியே வந்தால் மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும். இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கொலை குற்றவாளி ராஜேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் பரிந்துரை செய்திருந்தார்.

இதையடுத்து கொலையாளி ராஜேஷை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி திருக்கோவிலூர் போலீசார் குற்றவாளி ராஜேஷை கடலூர் மத்திய சிறயைல் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post திருக்கோவிலூர் அருகே 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: