தமிழகம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை: தமிழக அரசு உத்தரவு Jun 23, 2021 தமிழ்நாடு அரசு சென்னை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பிஎம்சி சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பி.எம்.சி. எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையைப் பின்பற்றி மின்கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்தாண்டு ஜூன் மாத மின் கட்டணத்தைச் செலுத்தலாம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டண சலுகை பொருந்தும். புதிய நுகர்வோர், கணக்கீடு இல்லாதோர், கூடுதல் கட்டணம் என கருதுவோர் 2021 ஏப்ரல் மாத கட்டணத்தை செலுத்தலாம். 2021- ஆம் ஆண்டுக்கான உத்தேச கட்டணம் ஆகஸ்ட் மாதம் முறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. … The post தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சம்பவம் நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சாதி ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படவில்லை: முதற்கட்ட விசாரணைக்கு பிறகு சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது: ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக பரபரப்பு வாக்குமூலம்
உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்
பாலியல் குற்றத்திற்காக சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது என்றால் பாஜ நிர்வாகிகளை முதலில் கைது செய்ய வேண்டும்: திருமுருகன் காந்தி பேச்சு
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் மரணம்; ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியது; வீட்டில் ரூ.12 லட்சத்தை புதைத்த சார்பதிவாளருக்கு பதிவு இல்லாத பணி: பதிவுத்துறை அதிரடி
3 ஆண்டுக்குப்பின் நடந்த பாரம்பரிய விழா; 300 ஆட்டுக்கிடாய்களை வெட்டி மண் பானையில் அறுசுவை விருந்து: 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு