‘தக்காளி’ உள்பட 3 பேர் மீது ‘குண்டாஸ்’

மதுரை, ஜூலை 22: மதுரை அனுப்பானடி சோனையா கோயில் தெருவை சேர்ந்தவர் தீபக் என்ற தக்காளி(23). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற முத்துராஜா என்ற காயிரா(24), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபாறைப்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ்(23). இவர்கள் மூவரும் கொலை வழக்குகளில் கண்காணிப்பிற்குள் இருந்து வருகின்றனர். இவர்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகமான வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ‘தக்காளி’ உள்பட 3 பேர் மீது ‘குண்டாஸ்’ appeared first on Dinakaran.

Related Stories: