சோழவந்தான் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

 

சோழவந்தான், மே 8: சோழவந்தான் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதில் இலக்கை கடந்த கூடுதல் நபர்களை சேர்த்த கட்சி நிர்வாகிகளை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டினார். சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி இப்பகுதியில் உள்ள, 33 கிளைகளுக்கு 6,500 புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி அறிவுறுத்தலின்படி, எம்எல்ஏ வெங்கடேசன் வழிகாட்டுதலின் பேரில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் உள்ளிட்ட ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதன்படி வீடுகள் தோறும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்த நிர்வாகிகள், திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டனர்.

இதன்படி, 6700 பேர் புதிய உறுப்பினர்களாக ஆர்வத்துடன் இணைந்துள்ளனர். இதையடுத்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வாடிப்பட்டியில், மாவட்ட செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தியிடம், எம்எல் ஏ வெங்கடேசன் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் ஒப்படைத்தார். வழங்கப்பட்ட இலக்கை கடந்து கூடுதல் உறுப்பினர்களைச் சேர்த்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டினார்.

The post சோழவந்தான் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: